இறைவனுக்கு

Webdunia

வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (15:23 IST)
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.

இறைவனுக்கு

என்னோடு வா!
இறைவா!
என்னோடு வா!
அழைக்கின்றேன் - உன்னை
துதிக்கின்றேன் உன்னை
அருள் தரும் வாழ்வு - இனி
புதுசுகம் தரும் வாழ்வு
மனிதத்தை விதைத்து
நேசத்தை வளர்ப்போம்!!
மாயத்தைக் களைந்து
உண்மையை உடுப்போம்!!!
போர்களை ஒழிப்போம்!
புதுமைகள் செய்வோம்!
பாவங்களை மன்னிப்போம்!
பகைவர்களை நேசிப்போம்!!
பயந்துவிடாதே!
மரங்கள் இல்லை
இங்கே - உனக்கு சிலுவைகள் செய்ய!

வெப்துனியாவைப் படிக்கவும்