பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர்.
இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர்.
மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர்.
விவரமின்றி நெருங்குவோரை ஆயிரக் கைகளால் வளைத்து இறுக்கி நொறுக்கி உண்ணும் அசுரம் செய்வர்; தவறிப் போய் மனையருகே விட்டால் சுவர் விரிசல் கொள்ள கால்கோள் குலையக் குடிகெடுப்பர்.
நோயல் ஜோசப் இருதயராஜ் திருச்சியில் பிறந்து பெரும்பாலும் அந்நகரிலேயே வாழ்ந்து வருபவர். Fulbright - Hays கல்விக்கொடை பெற்று நியூயார்க் பல்கலையில் இலக்கியத்தில் கூடுதல் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை பல்கலையில் அமெரிக்கப் பின்நவீனத்துவ கவிதை ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.
உங்களது படைப்புகளை அனுப்புங்கள்
உங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவியுங்கள். மின்னஞ்சலில் அனுப்ப [email protected]t என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இல்லையெனில் தபாலில் எங்கள் அலுவலக முகவரிக்கும் அனுப்பலாம்.