Webdunia
சனி, 10 நவம்பர் 2007 (12:11 IST)
லட்சுமி எழுதிய கவிதையில்
என்னுள் சுமையாய் இருந்த இதயம்
இன்று தான் சுகமாய் தெரிகிறது
அது என் கவிதையை சுமப்பதால்...
உனக்காக உறங்கும் இதயம் இதோ!
கனவில் உன்னை செதுக்க!
உனக்காக விழிக்கும் இதயம் இதோ!
நிஜத்தில் உன்னை வடிக்க!
ஏனோ என் பேனாவால், என் நோட்டுப்புத்தகத்திற்கு,
முத்தம் கொடுத்தேன்.
வரிகளாய் அதில் நீ தோன்றினாய்!
ஒருவேளை
வரிகளுக்கு நான் முத்தம் கொடுத்திருந்தால்
நீ கவிதையாயிருப்பாயோ!