‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌‌பிறகு இ‌ந்‌திய மாணவ‌ர் ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்!

செவ்வாய், 13 மே 2008 (14:20 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் க‌த்‌தியா‌ல் கு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் சாலை‌யி‌ல் ‌கிட‌ந்த இ‌ந்‌திய மாணவ‌ர் ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ‌வீடு ‌திரு‌ம்‌பினா‌ர்.

ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல் டா‌க்‌சி ஓ‌ட்டி‌க்கொ‌ண்டே படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இ‌ந்‌திய மாணவ‌ர் ஜ‌ல்‌வீ‌ந்த‌ர் ‌சி‌ங், கட‌ந்த ஏ‌ப்ர‌ல் 29 ஆ‌‌ம் தே‌தி க‌‌த்‌தியா‌ல் கு‌த்த‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் சாலை‌யி‌ல் ‌கிட‌ந்தா‌ர்.

இதை‌க் க‌ண்டவ‌ர்க‌ள் அவரை ‌மீ‌‌ட்டு ராய‌ல் மெ‌ல்ப‌ர்‌ன் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அ‌ங்கு ‌தீ‌விர ‌சி‌கி‌ச்சை பெ‌ற்றுவ‌ந்த ஜ‌ல்‌வீ‌ந்த‌ர் ‌சி‌ங், குணமானதையடு‌த்து இ‌ன்று ‌வீ‌ட்டி‌ற்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்டா‌ர்.

மு‌ன்னதாக‌க் கட‌ந்த ஒருவார‌த்‌தி‌ல் அடி‌க்கடி அவ‌ர் சுய‌நினைவை இழ‌ந்ததா‌ல் மரு‌த்துவ‌க் குழு‌வின‌ர் ‌மிகவு‌ம் பய‌‌‌ந்‌திரு‌ந்தன‌ர். ஜ‌ல்‌‌வீ‌ந்தரு‌க்கு தலை‌யிலு‌ம், உட‌லி‌ன் மே‌ற்புற‌த்‌திலு‌ம் கடுமையான கு‌த்து‌க்காய‌ம் இரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்