தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து மீன் துண்டுகள் மீது தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.