கொந்தின கறியை அலசி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு, 1 டம்ளர் நீர்ஊற்றி வேக வைக்க வேண்டும். கறி வெந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியையும், உப்பையும் சேர்த்து மேலும் அரை மணி நேரம் வே வைத்து இறக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, லவங்கம் ஆகியவற்றை மிக்சியில் சிறிது நீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, மீதமுள்ள வெங்காயத்தையும், நசுக்கி வைத்துள்ள மசாலாவையும் போட்டு, வேக வைத்த கறியையும் சேர்த்து வதக்கவும். நீர் சுண்டி கறி சிவந்தவுடன் வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திரட்டிய பூரிகளை, கத்தியினால் இரண்டு சம பாகங்களாக அறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு அரை பூரியை எடுத்து அதன்மத்தியில் அரை தேக்கரண்டி கறி வறுவலை வைத்து, பூரியை முக்கோணமாக மடித்துவிட வேண்டும். இவ்வாறு எல்லா பூரிகளையும் சம்சாவாகச் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து, டால்டாவை ஊற்றிக் காய்ந்ததும், இரண்டு அல்லது மூன்று சம்சாவாகப் போட்டுச் சிவந்தபுடன் எடுத்துவிட வேண்டும். அடுப்பை மிகவும் சிறியதாக எரிய விட வேண்டியது அவசியம்.