இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சிறிது நீர் விட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு ஆழாக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததம், வெங்காயம், நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலா, அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் ஊற்றி மூடி விட வேண்டும்.
15 நிமிடங்கள் கொதித்த பிறகு மூடியை அகற்றி, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு, மீன் வெந்ததும் குருமாவை இறக்கி விட வேண்டும்.