முதலில் சிக்கன் லெக் பீஸை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் கத்திக் கொண்டு சிக்கன் லெக் பீஸின் தசைப்பகுதியை ஆழமாக கீறி விட வேண்டும். அப்போதுதான் மசாலா அதனுள் நன்கு ஊறும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தயிர் அல்லது எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்சேர்த்து கலந்து, அந்த கலவையை சிக்கன் மீது தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் கலர் சேர்த்து கொள்ளலாம்.
மற்றொரு பாத்திரத்தில் மைதாவை போட்டு, முட்டையை ஊற்றி, சிறிது தண்ணீர், மீதியுள்ள பச்சை மிளகாய் பேஸ்ட் மற்றும் மிளகு தூளை சேர்த்து சிறிது உப்பு போட்டு, கலந்து கொள்ள வேண்டும். பின் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து அரைத்த விழுதை கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான சிக்கன் லெக் ப்ரை தயார்.