முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும். பின்னர் புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கும் போது அதனுடன் ஒரு வெங்காயத்தையும் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காய விழுது சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் காய்ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவும்.