முருங்கையின் காய், இலை, பூ, விதை என அனைத்துமே மருத்துவ பயனுடையது. முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும்.
முருங்கை விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக ஆண்மை அதிகரிக்கும் லேகியங்களில் சேர்ப்பதுண்டு.
விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.