இலங்கை வன்முறை: 7 பேர் உயிரிழப்பு, 231 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்

செவ்வாய், 10 மே 2022 (14:49 IST)
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.

காலிமுகத் திடலில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், செஞ்சிலுவை சங்க மருத்துவமனை மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

ஆளும் கட்சி எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளில் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆளும் கட்சி எம்.பி அமரகீர்த்தி அத்துகோரல தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன் கிழமை வரை பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் 218 நபர்கள் உட்பட மொத்தம் 231 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்