பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பால் !!

தினசரி காலையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். எலும்புகளை வலிமையாக்க பால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், இதில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்கிறது மற்றும் கீல்வாத நோயின் தாக்கத்தை தடுக்கிறது. 

உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினசரி காலையில் பாலை உட்கொள்ளத் தொடங்கலாம். மன அழுத்தத்தை உணர்ந்தால், காலையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். 
 
பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை மன அழுத்தத்தை நீக்க உதவுகின்றன. தினசரி காலையில் பால் உட்கொள்வதன் மூலம் பலவீனத்தைத் தவிர்க்க இயலும். மேலும், உடலை உற்சாகப்படுத்துகிறது. 
 
பெண்கள் மாதவிடாய் காலத்தில் காலையில் சூடான பாலைக் குடிக்க வேண்டும். பாலில் கால்சியம் மற்றும்  ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
 
தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இரவில் பால் பருக வேண்டும். தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்க பால் உதவுகிறது. இரவில் பால் உட்கொள்வதன் மூலம், செரிமானப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க முடிகிறது.
 
பெண்கள் தங்கள், முகத்தை பொழிவுடன் வைத்திருக்க தினசரி இரவில் பால் உட்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால், அதாவது கொழுப்பு  சத்து, அதிகம் இருப்பவர்கள், கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 
தயிர் மற்றும் மோர்  எடுத்துக் கொள்ளலாம். அதிலும் மோர் மிகவும் நல்லது. ஜீரண பிரச்சனை எதுவும் ஏற்படுவதில்லை. 
 
அதே போல் இரவில் பால் குடித்த உடனேயே தூங்கினால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தூங்குவதற்குகு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்