நம் உடலில் பல்வேறு வகையான புண்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமாக வாய்ப்புண், வெட்டுக்காய புண், தலையில் புண், புரையோடிய புண் போன்றவை நம்மை பாடாய் படுத்துகிறது.
இவற்றில் இருந்து நிவாரணம் பெற:
1. வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம் ஆறிவிடும்.
2. நாயுருவி இலை, சுண்ணாம்பு, வெள்லைப்பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து வழித்து, காயத்தை சுத்தம் செய்து அதன் மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும். காயம் ஆறிய பின் தான் இந்த மருந்து விழுந்துவிடும்.
3. வெட்டுக்காயம் ஆற வசம்பு தூளை காயத்தின் மீது தூவ குணமாகும்.