மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது.
அவர்களின் ஆராய்ச்சியில் புற்று நோய் பாத்தித்த சுண்டெலிக்கு மாங்காய் கொடுத்து ஆராய்ந்த பொழுது அதன் புற்று நோய் கட்டிகளில் மிகுந்த மற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோய் கட்டிகள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு காரணம் மாங்காய் மற்றும் மாம்பழத்தில் உள்ள லூபியோல் என்ற வேதிப்பொருள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த லூபியோல் புற்றுநோய்க்கு எதிராக மட்டுமில்லாமல் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கும் தீர்வாக உள்ளது.