அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படும் ஆளி விதை !!

கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடலில் அதிக செயல்பாடுகள்  இல்லாததால் உடை எடை அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆளி விதைகள் பயனுள்ளதாக அமைகிறது. 


ஆளி விதையில் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன, இதனால் இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. 
 
மன அழுத்த காரணமாக, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இவை இருதயத்தை நேரடியாக பாதிக்கிறது மற்றும் இருதயம் தொடர்பான  வியாதிகளை ஏற்படுத்துகிறது. ஆளி விதை நுகர்வு இத்தகைய சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக அமைகிறது. ஆளி விதைகளில் ஃபைபர், லினோலிக் அமிலம் மற்றும் லைஃப்லைன் ஆகியவை உள்ளன, இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
 
ஆளி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இவை செரிமானத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு வகை 1 க்கு சிகிச்சையளிக்க ஆளி விதைகள் பயனுள்ளதாக அமைகிறது.
 
ஆளி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளன, இவை உடலில் உண்டாகும்  தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்துகிறது. 
 
ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி–ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன 
 
குறிப்பு: இவை உடலின் வெப்பநிலையை பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது கருப்பையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  
 
மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்ளக்கூடாது. ஆளிவிதைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்