நன்கு கனிந்த பழங்களை எடுத்து கழுவி, தோல் உரித்து, விதை நீக்கி சாப்பிட வேண்டும். சில பழங்களை அப்படியே சாப்பிடலாம். எடுத்துக்காட்டாக கொய்யாப்பழம், இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது சிறு துண்டுகளாக்கி மிளகுத்தூள், உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
ஆப்பிள், பேரிக்காய் இவற்றை கழுவி சிறு சிறு துண்டுகளாக்கி விதைகளை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அன்னாசிப்பழம், திராட்சைப்பழம் இவற்றை சாப்பிடலாம். சாத்துக்குடி, ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி சாப்பிடலாம்.
ஆப்பிள், கொய்யா, வாழை பழங்கள், பேரீச்சம் பழம், திராட்சைப்பழம் இவற்றினை கலந்ததே கலப்பு பழங்கள். இத்துடன் தேனும், தேங்காய் துருவலும் சேர்த்து சாப்பிடலாம்.
அத்திப்பழச்சாறு, சப்போட்டா பழச்சாறு தயாரிக்க, அத்திப்பழம், சப்போட்டா பழத்தை தோல் உரித்து பழங்களை எடுத்து சிறிதளவு தண்ணீர் கலந்து ஜூசாக தயார் செய்யலாம்.
எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். பல சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி டீ, காப்பி சாப்பிடுவர். அதற்கு பதிலாக இதனை சாப்பிட்டால் சோர்வு, வறட்சி, தாகம் நீங்கும். இச்சாறை மயக்கம், வாந்தி, உஷ்ணம், பித்தம், வாய்குமட்டல், நீர்வேட்கை, கண்நோய், அம்மைநோய் உடையவர்கள், காமாலை நோய் மற்றும் கழிச்சல் உள்ளவர்களும் சாப்பிடலாம்.