கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, திப்பிலி, காயம், இந்துப்பு சம அளவு எடுத்து பொடி செய்து, சுடுசாதத்தில் கலந்து நெய் விட்டு பிசைந்து சாப்பிட பசியின்மை, உணவில் வெறுப்பு, புளியேப்பம், வாய் குமட்டல் ஆகியவை குணமாகும்.
கறிவேப்பிலை, மிளகு, சீரகம், வெந்தயம், சுண்டை வற்றல், சூரணத்து உப்பு சேர்த்து உணவில் கலந்து சாப்பிட்டு வர மந்தம் நீங்கி பசி உண்டாகும்.
கறிவேப்பிலையை துவையலாகவோ, பொடியாகவோ செய்து தினமும் உட்கொண்டு வர, செரியாமை, பசியின்மை, கழிச்சல் இவற்றைப் போக்கும். தலைமுடியை நீண்டு வளரச் செய்யும்.