உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட வெள்ளரிக்காய் !!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (10:28 IST)
வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது, இரத்தத்தில் உள்ள கழிவுகளையும், நச்சு க்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரும்பொழுது, உடலுக்கு தேவையான பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்கப் பெற்று உடலில் நீர் சத்தை அதிகப்படுத்தி உடல் சூடு, உடல் வறட்சி, அதிக தாகம், பித்த நோய்கள் போன்றவற்றை தீர்க்கிறது.
 
வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை உள்ளதால் யூரிக் அமிலத்தை வெளியேற்றி எலும்புகளை பாதுகாக்கிறது.
 
சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்திருப்பதால், சரும செல்களை பாதுகாக்கின்றது.
 
வெள்ளரிக்காய் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதால், சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவற்றை குணப்படுத்துகின்றது.
 
வெள்ளரிக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் நிறைந்து இருப்பதால், இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெள்ளரிக்க்காயினை சாப்பிட்டு வருவது சிறந்தது.
 
வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையய் போக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்