குஜராத்தில் இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில், "பெண்களின் தொலைபேசி உரையாடல்கள் குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், குஜராத் முதல்வர் பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசி வருகிறார்" என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளார்.
இதுகுறித்து புனேயில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி பேசியதாவது:-
குஜராத் முதல்வர், பெண்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்கிறார். அங்கு காவல்துறையினர் பெண்களை மதிப்பதில்லை. பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.