இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியசாமி, பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பார் போலும், அதனால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று கூறினார்.
இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் இன்று டெல்லியில் உள்ள சு.சாமியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கடும் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த ஆவேச தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக சு.சாமி வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.