நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் ‘சுள்’ளென்று அடித்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் அந்தப்பகுதியில் வீடு வீடாக நடந்து சென்ற அவர், கட்சிச்சின்னமான ‘மின்விசிறி’க்கு ஓட்டளிக்குமாறு வாக்காளர்களை கேட்டார்.
விரைந்து சென்ற மருத்துவ குழுவினர், ரோஜா உடல்நிலையை பரிசோதித்தனர். வெயில், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது