ஆந்திராவை சேர்ந்த 23 வயது பெண், ஹைதராபாத் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். தனது செல்போனை ரிப்பேர் செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத் வந்தார். அப்போது, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
அவரிடமிருந்து தப்பிக்க, அந்த பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, ரயில் உடனே நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணை சோதனை செய்தபோது, அவருக்கு தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது.