கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் முகமதுயாசின் (35) மேற்குவங்க மாநிலத்தின் அவுராவில் இருந்து கோழிக்கோட்டுக்கு ரயிலில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ரயில் பாலக்காடு ஸ்டேஷன் அருகில் வரும் போது, முகமது யாசினிடம் இருந்த பையை 3 பேர் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து தப்ப முயன்றனர்.
இதை கண்ட பாலக்காடு ரயில்வே போலீசார் அந்த 3 பேரையும் துரத்திச்சென்று கைது செய்தனர். பிடிபட்டவர்கள் காசர்கோடு முகமது இக்பால் (29), போதுர்கா அர்பத் (24) அப்துல் ரசீத் (27) என தெரிந்தது. இது குறித்து முகமது யாசின், புகார் கொடுக்க ரயில்வே காவல் துறையினரிடம் வந்தார்.
அப்போது, அவரிடம் விசாரணை செய்த காவல் துறையினர் அந்த பையை சோதனை இட்டனர். அதில் செல்ஃபி எடுக்கும் ஸ்டிக் ஒன்று இருந்தது. அந்த ஸ்டிக்கை பிரித்து பார்த்த போது உள்ளே சுமார் ரூபாய் 47லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.