உத்திரபிரதேசம் மாநிலம் புலந்தசகர் மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் சந்திரலேகா. இவர் பிப்ரவரி 1ஆம் தேதி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒரு வாலிபர் தான் வைத்திருந்த செல்போனில், சந்திரலேகாவுடன் செல்பி எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அங்கிருந்த காவல் அதிகாரிகள் செல்போனிலிருத்து செல்பி எடுத்த படங்களை அழிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த வாலிபரோ அவற்றை அழிக்க முடியாது என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனையடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.