ஆந்திராவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை..கண்டுகொள்ளாத போலீஸார்

வியாழன், 24 டிசம்பர் 2020 (18:11 IST)
ஆந்திராவில் அனந்தபூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் பாலியல்வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் அனந்தபூர் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அப்பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் ராஜேஷ் என்ற இளைஞர் தனது மகளைப் பின் தொடர்ந்து தொல்லை தருவது போலீஸில் புகாரளித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்