அமித்ஷா, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்குத் தான் கொழுப்பு அதிகம்: லாலு பிரசாத் யாதவ் காட்டம்

சனி, 20 ஜூன் 2015 (01:07 IST)
பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்குத் தான் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே அவர்கள் யோகா செய்யட்டும் என ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறுகையில்,  நமது நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் யோகா தேவையில்லை. காரணம், அவர்களுக்கு உடலில் கொழுப்பு சத்து அதிக அளவில் இருக்காது. ஏழை மக்களுக்கு முதலில் தேவை உண்ண உணவும், வாழ்வதற்கு வழியும் தான்.
 
எனவே, யோகா ஏழைகளுக்கு தேவையில்லை. உண்மையில் ஏழைகளின் பணத்தை தின்று கொழுத்த பெரும் பணக்காரர்களுக்குத் தான் யோகா தேவை.
 
நமது நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், பால் வியாபாரி, ரிக்‌ஷாகார்களுக்கு எல்லாம் தொப்பை இருக்கவே இருக்காது, ஏன் என்றால் அவர்கள் கடின உழைப்பாளிகள். அதனால், அவர்கள் யோகா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
 
பாஜக தலைவர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்குத் தான் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே அவர்கள் யோகா செய்யட்டும் என்றார்.
 
லாலுவின் இந்த கருத்து இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்