இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறுகையில், நமது நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் யோகா தேவையில்லை. காரணம், அவர்களுக்கு உடலில் கொழுப்பு சத்து அதிக அளவில் இருக்காது. ஏழை மக்களுக்கு முதலில் தேவை உண்ண உணவும், வாழ்வதற்கு வழியும் தான்.
நமது நாட்டில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், பால் வியாபாரி, ரிக்ஷாகார்களுக்கு எல்லாம் தொப்பை இருக்கவே இருக்காது, ஏன் என்றால் அவர்கள் கடின உழைப்பாளிகள். அதனால், அவர்கள் யோகா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.