இதுகுறித்து அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முதியவர் ஒருவர் கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோசமான அரசியல் இருப்பதாகவே கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இதில் தலையிட்டு உடனடியாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியுமெனில் நாடு முழுவதும் இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பிரதமர் சிந்திக்க வேண்டும்.” என்றார்.