இந்நிலையில், யாகூப் மேமன் கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், யாகூப் மேமனின் வழக்கிறிஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவர்களது இல்லத்தில் நள்ளிரவில் சந்தித்து, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை 14 நாட்கள் நிறுத்திவைக்கக் கோரி மனு கொடுத்தனர். இந்த மனு மீதான பரிசீலனை, சுப்ரீம் கோர்ட் எண் 4 ல் வைத்து விசாரணை நடைபெற்றது.
அப்போது, வாதிட்ட அரசு வக்கீல் முகுல் ரோகித்கி, சட்டத்தில் உள்ள சாதக வழிகளை பயன்படுத்தி நேர்மையற்ற தண்டனையை இழுத்தடிக்க முயல்வதாகவும், மேலும், சிறையிலேயே இருக்க மேமன் முயற்சி செய்வதாகவும் வாதிட்டார். இரதரப்பு வாதத்ததையும் கேட்டறிந்த 3 பேர் கொண்டபெஞ்ச், மேமனின் புதிய மனுவை நிராகரித்தனர்.
இதையடுத்து, மேமனின் துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. காலை 6.30 மணிக்கு நாக்பூர் சிறையில் மேமன் துாக்கிலிடப்படுகிறார். இதனால், நாக்பூர் சிறை முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதி முழுக்க 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.