அப்போது அவர் பேசுகையில், ”பஞ்சாப் மாநிலத்தில் பலர் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கலாச்சாரமும், பண்பாடும் அதிகம் கொண்ட பஞ்சாப் சீரழிந்து வருகிறது.
குறிப்பாக சமூக தீமைகளை ஒழிப்பதில் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சினிமா தயாரிப்பாளர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான, சமூக நன்மைக்கான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.