இதையடுத்து நிலத்தை மீட்பதற்காக அந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.இதனால் ஆத்திரமடைந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி கைதுப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்கள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளார். இதில் ஒரு பெண் ட்ராக்டர் அடியில் சிக்கிக்கொண்டார். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பினார். இந்த காட்சி விடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.