பீகார் மாநிலம் ஜெகனபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிஜாமுதீன்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர். சங்கீதா தேவி (வயது 40). இவர் நில விவகாரம் காரணமாக சக்தி சிங் என்ற வாலிபர் ஒருவரை கடத்தியதாக கூறபட்டது. இதை தொடரந்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக திரண்டுவந்து சங்கீதா தேவியின் வீட்டை அடித்து நொறுக்கினர். பின்னர் சங்கீதா தேவியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து அவரை கடுமையாகத் தாக்கி அவரை நிர்வாணபடுத்தினர்.
பெண் தாக்கபட்டு நிர்வாணபடுத்தப்பட்ட சம்பவத்தை மாநில பெண்கள் ஆணைய தலைவி அன்ஜூம் ஆரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி உள்ளார். இந்த விவகாரம் மாநில சட்டசபை கூட்டத்தில் எதிரொலித்தது. எதிர்கட்சிகள் இந்த சமபவத்திற்கு கண்டன குரல் எழுப்பின. இதை தொடர்ந்து பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி இந்த விவாகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என நிருபர்களிடம் தெரிவித்தார்.