பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரத்தில் நிர்வாணமாக கட்டப்பட்ட பெண்

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (17:57 IST)
உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாணமாக மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உத்தர பிரதேசத்தின் கன்னூஜ்ஜில் 33 வயது பெண் ஒருவர்  3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நிர்வாண நிலையில்  மரத்தில் கட்டப்பட்டார்.

இச்சம்பவத்தில் குற்றம் சாற்றப்பட்டவர்களுள் ஒருவர் பள்ளி ஆசிரியர் எனவும், மற்றொருவர் கிராம தலைவரின் மகன் எனவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்