பெங்களூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்கு சென்றுவிட்டு, தனது நண்பரின் ஹோண்டா காரில் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு திரும்பிய போது தனது அடுக்குமாடி குடியிருப்பின் முன் காரிலேயே உட்கார்ந்து நண்பரும் அப்பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஷேக் பகதூர் என்பவரின் மகன் நசீர் ஹைதர் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஸ்கோடா காரில் அவர்களை கடந்து சென்றுள்ளது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பி வந்த அவர்கள் தங்களை காவல்துறையினர் என்று கூறியதுடன் காரை திறக்க கூறியுள்ளனர். காரை திறந்தவுடன் நான்கு பேரும் சேர்ந்து இருவரையும் தாக்கியதுடன் பின் சீட்டில் அவர்களை தள்ளியுள்ளனர். பின்னர் காரின் முன் பக்கம் இருவர் ஏறிக்கொள்ள பின்பக்கம் நசீர் அப்பெண்ணுக்கு அருகிலும், மற்றொருவன் நண்பருக்கு அருகிலும் உட்கார்ந்து கொள்ள காரை கடத்திச் சென்றுள்ளனர். நண்பரின் பக்கத்தில் இருந்தவன் அவரது கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள நண்பர் முன்னிலையிலேயே காரில் வைத்தே நசீர் அப்பெண்ணை கற்பழித்துள்ளார்.
பின்னர் காரை காக்ஸ் டவுன் ரயில்வே பிளாக்கை நோக்கி செலுத்திய அவர்கள், அங்கு சென்ற பின் காரை நிறுத்தச் சொல்லி, அப்பெண்ணின் நண்பர் உள்பட அனைவரையும் வெளியேற்றிய பின் மீண்டும் அப்பெண்ணை கற்பழித்துள்ளார். இதுகுறித்து அப்பெண் ப்ரேசர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து ஸ்கோடா காரின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளி நசீர் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.