இந்நிலையில், நாணு மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ரஷித் மற்றும் அவரின் தாயாருக்கு நாணுவின் மீது கோபம் ஏற்பட்டது. மீண்டும் பெண் குழந்தை பெற்றெடுத்து விட்டாயே எனக்கூறி, அவர்கள் இருவரும் நாணுவின் தலையை மொட்டை அடித்து விட்டனர். மேலும், பசிக்காக அழும் குழந்தைக்கு பால் கூட கொடுக்க விடாமல் சித்ரவதை செய்துள்ளனர்.
இதற்கு மேல் பொறுக்க முடியாது எனக்கருதிய நாணு, போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், அவரின் தாயார் வற்புறுதியதால் அந்த புகாரை வாபஸ் பெற்றார். இதனைத் தொடர்ந்து, ரஷித் மற்றும் அவரை தாயாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.