தாய்ப்பால் கொடுக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!

வியாழன், 28 ஜூலை 2022 (13:00 IST)
தெலங்கானாவில் 25 வயது ஜெய்ஸ்ரீ என்ற பெண் தனது இரண்டு மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தெலங்கானாவைச் சேர்ந்த ஜெய்ஸ்ரீ பிரசாத் தம்பதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து சமீபத்தில் 2 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த ஜெய்ஸ்ரீயை அவரது கணவர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாகக் கூறி அதற்கான மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே ஜெய்ஸ்ரீ இறந்துள்ளார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜெய்ஸ்ரீ மாரடைப்புக் காரணமாக இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்