புது டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில், ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகில் நேற்று இரவு, ஒரு காரில் வந்த இளம்பெண், தனக்கு முன்னால் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை இடித்தார்.
அதன்பின் காரிலிருந்து இறங்கி, அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபருடன் தகராறில் ஈடுபட்டார். அந்த பெண் மித மிஞ்சிய போதையில் இருந்தார். அதனால் என்ன செய்வதென்று என்று புரியாமல் அந்த வாலிபர் திகைத்து நின்றார்.
அருகிலிருந்து வந்து விசாரித்த போலீசாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதி பரபரப்பானது. தன் அப்பா சிபிஐ அதிகாரி என்றும், பத்தாயிரம் செலவழித்து சுலபமாக வெளியே வந்து விடுவேன் என்று அவர் கூறியதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.