அரைகுறை ஆடையுடன், ஆண்களோடு சுற்றுவதாக கூறி, ஒரு இளம்பெண்ணை தாக்கிய கும்பலை மகாராஷ்டிரா மாநில போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் 22 வயது மிக்க ஒரு இளம்பெண், தன்னுடைய தோழி ஒருவரின் திருமண நிகழ்சியில் நடந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த 1ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தன்னுடைய ஆண் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அதை தடுத்த, அந்த பெண்ணின் நண்பரையும் அவர்கள் தாக்கியுள்ளனர். அங்கிருந்த சென்ற அவர்கள் சிறுதி நேரத்தில் மேலும் நிறைய பேருடன் வந்து அவர்களை மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களின் வீடு வரை பின்னால் சென்று அவர்களை பயமுறுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது.
தன்னை அசிங்கமாக திட்டியவர்கள் மீதும், தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த இளம்பெண் ஒரு வாரம் காவல் நிலையத்திற்கு அலைந்த பின்புதான், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.