பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பாஜக ஆதரவாளர்களும், சிவசேனா கட்சியினர்களும், ஒருசில பாஜக தலைவர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருவதாக அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர் அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ டி. ராஜா சிங். என்பவர், ;'ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக துரோகம் செய்யும் நபர்களின் தலை துண்டிக்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
நான் இதை வரவேற்கிறேன். உண்மையிலேயே நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக இதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே, துரோகிகளாக உங்களுடைய தலையை தூக்கும்போது, நாங்கள் உங்களை தலையை வெட்டுவோம். அயோத்தில் ராமர் கோவில் கட்டுமானத்தை தடுக்க யாருக்கும் தைரியம் கிடையாது.