மேற்கு வங்காளத்தில், ஒரு கிராமத்திற்குள் புகுந்த ஒரு யானை ஒரு வாலிபரை துக்கி பந்தாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் பரத்வான் மாவட்டத்தில் உள்ள நாஷிகிராம் என்ற கிராமத்தில் புகுந்த ஒரு காட்டு யானையிடம் ஒரு வாலிபர் சிக்கிக்கொண்டார். அவரை அந்த யானை பந்தாடியது. இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களை துன்புறுத்துவதும் அடிக்கடி நடக்கும் சம்பவம்.
அதுபோல், அந்த கிராமத்திற்குள் புகுந்த ஒரு காட்டு யானை புகுந்து தாக்கியதில் நான்கு பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.