மனைவியை கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய கணவன்

ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (16:51 IST)
மும்பை காண்டிவலியில் சூட்கேஸில் உடல் வெட்டுபட்ட நிலையில், கிடந்த ஒரு பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்த மும்பை கிரைம்பிரான்ச் குழுவினர் பலகட்ட விசாரணைக்கு பின் கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர்.

 
கடந்த நவம்பர் 14ம் தேதி மும்பை காண்டிவலியில் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீஸார் அது யாருடையது என்பது தெரியாமல் திகைத்தனர். பின்னர் சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகளில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு யார் என விசாரித்ததில், போரிவாலி போய்சர் பகுதியிலிருந்து ஒருவர் தகவல் கொடுத்தார். அதில் கொல்லப்பட்டது பிரியங்கா வர்மா (29), அவரது கணவன் தினேஷ் வெர்மா (35) என்று கூறினார்.
 
பிரியங்கா வர்மா யாரோ ஒருவரிடம் கள்ளத்தொடர்பில் இருப்பதாக தினேஷ் வெர்மா சந்தேகித்ததாகவும், இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறியுள்ளார். சடலம் கைப்பற்றப்பட்ட நாள் அன்று தினேஷ் தனது குழந்தயுடன் தப்பியதாகவும், மேலும் அவரது நண்பர் கெளதமும் அவரது மனைவியும் காணாமல் போனதாக தெரிவித்தார். 
 
இதையடுத்து தினேஷ், கெளதமை தேடிய போலீஸார் கெளதமை கைது செய்து விசாரித்தனர். விசாரனையில், கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகித்த தினேஷின் மனைவி பிரியங்கா வர்மாவை கொள்ள கெளதம் மற்றும் புல்மாடியும் உதவினார்கள் என்றும், பிரியங்கா வர்மாவை கொலை செய்து சூட்கேசில் வைத்து மும்பை காண்டிவலி ரயில் நிலையத்தில் வீசினேன் எனவும் கெளதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தப்பி ஓடிய தினேஷ் வெர்மா மற்றும் புல்மாட்டியை போலீஸார் தேடிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்