ஸ்டெரெச்சர் தராததால் கணவனை இழுத்து சென்ற கொடுமை : மருத்துவமனையில் அதிர்ச்சி (வீடியோ)

வெள்ளி, 18 நவம்பர் 2016 (11:39 IST)
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற தனது கணவனுக்கு, ஸ்டெரெச்சர் தராததால், அவரின் மனைவி அவரை முதல் தளத்திற்கு இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீனிவாச்சாரி என்பவர், உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவரது மனைவியுடன் சென்றுள்ளார். 
 
அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால், அவரால் நடக்க கூட முடியவில்லை. அதனால், அவரை முதல் தளம் அழைத்துச் செல்ல, அவரின் மனைவி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஸ்ரெச்சர் கேட்டுள்ளார். ஆனால், அதை கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
 
எனவே, வேறு வழியின்றி தனது கணவரை முதல் மாடிக்கு இழுத்தே சென்றுள்ளார் அந்த பெண். அவருக்கு உதவ யாரும் முன் வரவில்லை. இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பலரும், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்