ஆசைக்கு பயன்படுத்தி கொண்ட அரசியல்வாதிகள் யார்?: கோர்ட்டில் தாக்கல் செய்தார் சரிதா நாயர்

வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (17:23 IST)
சூரிய ஒளி மின்தகடு மோசடி வழக்கில், யார், யார் தன்னை தங்கள் ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டனர் என்ற பெயர் பட்டியலை சரிதா நாயர் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.


 
 
சூரிய ஒளி மின்தகடு மோசடி வழக்கில், சிவராஜன் ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்துவரும் சரிதா நாயர், திங்கட்கிழமை அன்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி 3 சிடிக்கள் மற்றும் சில ஆவணங்களை தாக்கல் செய்தார்.
 
பின்னர் சரிதா நாயர் தனது வாக்குமூலத்தில், கேரளாவிலுள்ள பல முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர். எனக்கு பல வாக்குறுதிகள் தந்த அவர்கள் பல இடங்களுக்கு அழைத்து சென்று தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர். ஆனால் அவர்கள் யார், யார் என்பது குறித்து இப்போது என்னால் தெரிவிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
 
யார், யார்? என்னை தங்கள் ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டனர் என்பதை இந்த நீதிமன்றத்தில் கூறுவதற்கு தயக்கமாக உள்ளது. ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டால் அந்த தகவல்களை கூற தயாராக இருக்கிறேன் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த தகவல்களை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு சரிதாநாயர் ஒப்புக்கொண்டார்.
 
சரிதா நாயர் தனது வக்கீலுடன் கலந்து ஆலோசித்து, இன்று சீலிட்ட உறையில் அந்த அரசியல்வாதிகளின் பட்டியலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதனால், சரிதா நாயருடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்