இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி, மதுரா நகர காவல்துறை உயர் அதிகாரியின் செல்போனுக்கு, 'மதுரா வரும்போது நரேந்திர மோடி கொலை செய்யப்படுவார்' என வாட்ஸ்அப்பில் மிரட்டல் செய்தி வந்தது. இதையடுத்து, செய்தி அனுப்பப்பட்ட செல்போன் நம்பரை ஆய்வு செய்து, மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதில், மோடிக்கு மிரட்டல் செய்தி அனுப்பியவர், மதுரா மாவட்டம், நவ்லி கிராமத்தைச் சேர்ந்த ராம்வீர் என்பவர் எனத் தெரியவந்தது. அவர் போலி பெயரில் சிம்கார்டு வாங்கி மிரட்டல் விடுத்திருந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த நபர் ஓடி தலைமறைவாகி விட்டார்.