இந்த வாதத்தின் மீது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆவின் முறைகேடு குறித்து எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதில் என்ன தவறு உள்ளது என தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் ஜனநாயக நாட்டில் அரசின் குறைகளை சுட்டிகாட்டி பேச உரிமை இல்லையா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.