சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

செவ்வாய், 19 ஜனவரி 2016 (00:13 IST)
சுற்றுச் சூழலை, நாம் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
டெல்லியில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இல்லத்தில், மகா சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது, இந்த விழாவில், கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
 
இந்தியாவின் பாரம்பரியம், நமது திருவிழாக்களில் தான் அடங்கியுள்ளது. உலகத்திலேயே, இயற்கையை நேசிப்பது நமது பாரம்பரியத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆகும்.
 
இயற்கை குறித்த இந்திய தத்துவத்தின் சாரம் தான், பாரிசில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இயற்கை குறித்து உலக நாடுகள் மீண்டும் கவலைப்பட துவங்கியுள்ளன.
 
இயற்கையுடன் எப்படி இணைந்து வாழ்வது என்பது தான், உலக மக்களுக்கு முன்பு தற்போது உள்ள மிகப் பெரிய சவால் ஆகும்.
 
எனவே, சுற்றுச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், இயற்கையோடு நாம் இணைந்து வாழ வேண்டும் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்