டெல்லியில் இன்று நடைபெற்ற கல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் 'உழைப்பின் கவுரவம்' பற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பிளம்பராகவோ அல்லது மெக்கானிக்காகவோ இருக்கிறோம் என்று யாரும் தன்னைத் தாழ்வாக எண்ணக்கூடாது.
மேக் இன் இந்தியா முன்னெடுப்புகளை குறிப்பிட்டு பேசிய இரானி, திறமையான இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்று தொழிற்சாலைகள் ஆர்வமாக இருப்பதாகவும், நமக்கு திறமையான இந்தியா வேண்டுமானால், ஊழியர்களின் கண்ணியம் முக்கியமான அம்சமாகும். சமுதாயம் இதை அளித்தால் தொழிலாளர்களும் இந்த கண்ணியத்தை அடைவார்கள்" என்று தெரிவித்தார்.