கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் 70 மாணவிகளின் உடைகளை களைய சொல்லி அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளார் அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான பெண் சுரேகா தோமர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அதில், மாணவிகள், தங்களது உடைகளை மனிதாபிமானமற்ற முறையில் விடுதியில் அகற்றினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர். அந்த விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.