ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாத குழுக்கள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் புறக்கணித்ததுடன், தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில், சோபோர், பாரமுல்லா நகரங்களில் தேர்தலை புறக்கணிக்க மறுத்த வாக்காளர்களை நேற்று பிரிவினைவாத குழுவினர் அடித்து உதைத்தனர். சாலைகளில் நடந்துசென்ற மக்களின் விரல்களில் அழியாத மை இருந்தால் அவர்களை தாக்கியுள்ளனர்.