என்னை வேண்டுமானால் திட்டுங்கள்; என் மகனை விட்டு விடுங்கள் : கெஞ்சும் விஜய் மல்லையா

புதன், 30 மார்ச் 2016 (18:14 IST)
என் மகனை யாரும் திட்டாதீர்கள் என்று பிரபல் தொழிலதிபர் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
ரூ.9000 கோடிக்கும் மேல் இந்திய தேசிய வங்கிகளிடம் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், தற்போது லண்டனில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் விஜய மல்லையா.
 
அதனால், அவரை மட்டுமில்லாமல், அவரின் மகன் சித்தார்த்தையும் பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


 

 
இதனால் அதிருப்தி அடைந்த மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்த வெறுப்பு மற்றும் திட்டுகளை ஏற்றுக்கொள்ள என் மகன் சித்தார்த்துக்கு அவசியம் இல்லை. என்னுடைய வியாபாரத்திற்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களுக்கு திட்ட வேண்டுமானால் என்னை திட்டுங்கள். அவரை திட்டாதீர்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்