கடன் ஏய்ப்பாளர் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ஆவேசமடைந்த விஜய் மல்லையா, ஊடகம் செய்திகளுக்கு நான் ஏதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கேட்டார். ஒரு சிலரின் கற்பனை மீது ஒட்டுமொத்த மீடியாவும் கவனம் செலுத்தி வருகிறது, கடன் நிலுவை தொடர்பாக வங்கிகளிடம் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, தனது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவையில், நான் வாங்கிய அசலை மட்டும் செலுத்தத் தயாராக இருக்கிறேன். ஆனால் கடனுக்கான வட்டியை செலுத்த இயலாது என்று வங்கிகளிடம் விஜய் மல்லையா கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது.